Thursday, December 31, 2015

   
             வரவேற்போம் 2016 !
               இன்னும் ஒரு சில மணிகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது. 
புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம்.

   2015ன்  மோசமான நினைவுகள் நமது நினைவை விட்டு அகல 
வேண்டும்.

2016ல் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது சக்தி வாய்ந்த வாக்குரிமையை முதிர்ச்சியுடன் பயன்படுத்தி  நன்றாக ஆளத் தெரிந்த சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிபார்ப்போம்.

 நமது நிறுவனத்தில் இவ்வாண்டு  ஏப்ரல்/ மே திங்களில் 7வது அங்கீகாரத்

 தே
ர்தல் நடைபெறவுள்ளது. அது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 

மேலும் மூன்றாண்டுகளுக்கு நமது சங்கம் அங்கீகாரத்துடன் பணியாற்ற 

நாம் தேர்தல் பணியை காலதாமதமின்றி துவங்க வேண்டும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறும் வகையில் 
தற்போதைய அங்கீகார விதிகள் உள்ளபோதும், முதன்மைச் சங்கம்
 51 சதம் பெற்று விட்டால், அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் 
கிடைக்கும் என்ற விதியும் உள்ளது. ஆகவே மெத்தனமாக இருக்கக்
கூடாது.

நமது சங்கம் முதன்மை அங்கீகாரச் சங்கமாக இருந்தால்தான் 
கோரிக்கைகளில் சமரசமின்றி போராட முடியும் என்பதை 
ஊழியர்களிடம் விளக்கிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் 
உள்ளது. 

BSNLEU சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த காலத்தில் 
10  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொண்டதால்தான்   நமக்கு அடுத்த ஊதிய மாற்றம் 1-1-2017 முதல் 
அமலாக வேண்டும் நிலை உள்ளது. நமது சங்கம் அங்கீகாரத்தோடு இருந்தால்தான், 78.2 சத ஊதிய நிர்ணயம், அனைவருக்கு 30 சத ஊதிய 
நிர்ணயப்பலன், போனஸ் போன்ற பிரச்னைகளில் BSNLEU சமரசம் 
செய்து இழப்பை ஏற்படுத்தியது போல அல்லாமல் நமது கோரிக்கை 
முழுமையாக பெற முடியும். அந்த பிரச்னைகள் இன்னமும்கூட  
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது நாம் அனைவரும்  அறிந்ததே. 

மிகவும் அனுபவமும் ஆழ்ந்த அறிவாற்றலும் பெற்ற தோழர் குப்தா 
அவர்களின் முயற்சியால் முதல் ஊதிய மாற்றத்தின்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் நல்ல ஊதிய ஒப்பந்தம் சாத்தியமானது.

  ஆனால் BSNLEU சங்கத்தின் மேலாதிக்க போக்கால் இரண்டாவது ஊதிய 
ஒப்பந்தமும் NEPPயும் பல குறைபாடுகளோடு உருவானது.

  மூன்றாவது  ஊதிய ஒப்பந்தம் முழுமையானதாக அமைய நமது
சங்கத்திற்கு முதன்மை அங்கீகாரம் இன்றிமையாதது என்பதை 
அனைத்து ஊழியர்க்கும் விளக்கி வெற்றி வாகை சூடுவதோடு 
அனைத்து ஊழியர்களையும் ஒன்றினைத்து நல்ல ஊதிய ஒப்பந்தம் 
உருவாக  பாடுபடுவோம், முன்னேற்றம் காண்போம்  என்று புத்தாண்டில் 
உறுதி ஏற்போம்.  

     ------- தோழர் CKM அவர்களின் முகநூலில் இருந்து.....

Saturday, December 12, 2015

                 
         காலச் சக்கர சுழற்சியில் .....

In those good old days (probably the 40s, 50s) a man got a job in 
Madurai Municipality .(It became a corporation only in 1971). 
A monthly salary of Rs.40 was considered a royal sum in those 
days. For a sovereign of gold cost only Rs. 10. The authorities had 
agreed to give a salary of Rs. 40 to our hero. But there was a 
problem with the designation. 

You know we Maduraiites give a damn to what we are called. 
So this man told the authorities, "Call me thotti; pay me forty" 
Thotti is Tamil for scavanger,  the entry level grade in the 
Municipality. 

1980களில் லட்சத்திற்கும் மேற்பட்ட கேசுவல் மஸ்தூர்கள் கடும்
சுரண்டலுக்கு ஆளானார்கள். நமது சங்கம் அவர்களது நிரந்தரத்திற்காக
மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாக
அவர்கள் ரெகுலர் மஸ்தூர்கள் என்ற பெயரில் நிரந்தரப்படுத்தப் பட்டார்கள். நிரந்தரமான பிறகும் மஸ்தூர் எனும் பெயரா என்று கேள்விகள் கேட்கப்பட்டபோது, பெயரில் என்ன இருக்கிறது, 

 "Call me thotti; pay me forty" என்பது போல,  எனக்கு உங்களது நிரந்தரம்தான் முக்கியம் என்று பகர்ந்தார் தோழர் குப்தா. 

அதே போல 10 சத ஊழியர்க்கு Grade IV பதவி உயர்வு; 
அது கிடைக்காத ஊழியர்க்கு பணி ஓய்வு பெறும் ஓராண்டுக்கு 
முன் ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட். அதன் காரணமாக பணி ஓய்வு பெற்ற பின், பென்சன் தொகையும் கூடுதல் ஆனது.

பாட்னா கன்வெண்ஷனில் தோழர் குப்தா பதவி உயர்வு திட்டத்தை
முன்மொழிந்த போது, இந்த திட்ட்த்தால் ஊதிய உயர்வும் கிடைக்கும், 
சமூக அந்தஸ்தும் உயரும் என்ற போது,

 " Promotions are unwholesome " 

(பதவி உயர்வு என்பதே விரும்பத்தக்கதல்ல)  என்று பகர்ந்தார்
தோழர் N.J.ஜே.ஐயர் என்ற ஒரு தலைவர் ...

                      இன்று Designation  மாற்றம் ! 

சமூகத்தில் நமது அந்தஸ்து  உயருகிறதாம் !!
ஆனால் பெயர் மாற்றம் பெற்றாலும் வேறு துறை ஊழியர்களைக்
சுட்டிக்காட்டி அந்த பெயருக்கு ஏற்றாற்போல ஊதிய மாற்றம் 
கேட்கக் கூடாது என்று ஒரு ஷரத்து !! 

கால ஓட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் சிந்தனையில் !
செயல் பாட்டில் !!


      
       


               Change of Designation
       8 years pending issue resolved !

Consensus  arrived  between the management 
and staff side  on 11-12-2015 in respect of new designations for TTA, Sr. TOA, TM and RM. 

Sr.ToA cadre:- 
 1)   NE7 & NE 8      =       Senior Office Associate.
 2)   NE9 & NE10     =       Assistant Office Superintendent.
 3)   NE 11 & NE 12 =       Office Superintendent.
RM:       Assistant Telecom Technician
TM :      Telecom Technician.

TTA :    JE. 

      Agreement signed on 11th instant. 
                                    
                                                               Click Here

Saturday, December 5, 2015

                                         BSNLன் பெருமை 
Royal salute to all BSNL staff, who worked hard to maintain our network to serve better to affected public in Chennai. 
Only PSU's like BSNL can serve public at the need of the hour.

Wednesday, November 18, 2015

                                       



பி.எஸ்.என்.எல். செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடி: மார்ச் மாதத்துக்குள் 4ஜி சேவை தொடக்கம் :

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2014-2015 நிதி ஆண்டில் செயல்பாட்டு லாபமாக ரூ. 672 கோடியைப் பெற்றது என்று அறிவித்திருக்கிறது.

 எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது என்று அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் தெரிவித்ததாவது: 
2006-ஆம் ஆண்டு, நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதில் முதலிடத்தில் இருந்தது பி.எஸ்.என்.எல். ஆனால் 2006-ஆம் ஆண்டு முதல் 
2012 வரை, சேவைகளை விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்காததால் போட்டியில் பின் தங்கி, வீழ்ச்சி அடைந்துவிட்டோம். அந்த காலகட்டத்தில்தான் நாட்டின் தொலைத் தொடர்பு சேவை அதிவேக வளர்ச்சி அடைந்தது.
 
சென்ற சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வந்தது. 
ஆனால் கடந்த 2014-2015 நிதி ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 
அளித்து வரும் சேவைகளின் மூலம் பெற்ற வருவாய் 4.16 சதவீதம் 
அதிகரித்து ரூ. 27,242 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டு அளவில் 
இதுவே மிக அதிக வருவாயாகும்.

 செலவுகள் போக நிறுவனம் ஈட்டிய செயல்பாட்டு லாபம் ரூ. 672 
கோடியாக இருந்தது. 
எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது.

குரல் சேவை அளிப்பதில் நிறுவனம் பின் தங்கிவிட்டது. தற்போது, 
இணையதள அடிப்படையில், தகவல் சேவைகளில் கூடுதல் கவனம் 
செலுத்தி வருகிறோம். மொத்த வருவாயில் செல்லிடப்பேசி சேவையின் 
பங்களிப்பு 10 சதவீதமாகும்.
 பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் சிக்கித் 
தவித்து வருகின்றன.
 ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சொத்து மதிப்பு - கடன் விகிதம் 
மிகவும் ஆரோக்கியமாக, 1 சதவீதத்துக்கும் குறைவாக 0.13 சதவீதமாக 
உள்ளது.
 நிறுவனத்தின் நெட்வர்க் தொடர்புகளை அதிகரிக்கும் பணியில் ரூ. 7,700 கோடியை  இவ்வாண்டு முதலீடு செய்யவுள்ளோம்.

 நிதி ஆண்டின் இறுதிக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள்
 4ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை அளிக்கத் தொடங்குவோம். முதல் கட்டமாக, 2600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் அளிப்போம். பி.எஸ்.என்.எல்.லுக்கு சொந்தமான மொபைல் கோபுரங்களைப் 
பிற நிறுவனங்களும் பயன்படுத்தும் விதமாக ஒப்பந்தம் ஏற்படுத்தி 
வருகிறோம். கோபுரப் பயன்பாடு மூலம் பெற்ற வருவாயில் 42 சதவீத 
வளர்ச்சி உள்ளது. தொலைத் தொடர்பு கோபுர வணிகச் செயல்பாடுகளைத் 
துணை நிறுவனமாக அமைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டது. விரைவில் அது அமைக்கப்படும் என்றார் அவர்.

Thursday, November 12, 2015

24வது லோகல் கவுன்சில் கூட்டம் 

இன்று கோவை லோகல் கவுன்சில் கூட்டம்  PGM  திரு.  D.சிவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அனைத்து ஊழியர் பிரச்னைகளும் ஆழமாக விவாதிக்கப்பட்டன. 

நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் எல்.சுப்பராயன், A.ராபர்ட்ஸ், 
S.ஸ்ரீதரன், அலெக்ஸ், V. சப்தகிரி ஆகியோர் கலந்துகொண்டு   விவாதங்களில் பங்கேற்றனர்.  






Friday, November 6, 2015

                                           

                                               From CHQ Web-site

நிர்வாகத்துடன்  நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கும்போது ரகசியமாக வீடியோ / ஆடியோ ரெக்கார்டிங்  செய்து அதை தவறாக பயன்படுத்துபவர்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

                                                  BSNL நிர்வாகம் உத்திரவு !


06-11-2015 : The audio/Video recordings of official meetings is not permitted.

             Letter No.-BSNL/31-1/SR/2014, dt-06-11-2015.

                          
Click Here

இது எல்லா கூட்டங்களுக்கும் பொருந்தும் என்பது நமது கருத்து.

சென்ற வாரம் நமது சங்க அலுவலகத்தில் நடந்த செயலக

கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒருவர் நாம்

 நடத்திய  விவாதங்களை ரகசியமாக ரெகார்டு செய்ததாக

 அறிகிறோம் !

அவரது செயலை  எந்த வார்த்தைகளால் விவரிப்பது என்பதை

 அவரது 
 கற்பனைக்கே விட்டு விடுகிறோம்
! 

Tuesday, November 3, 2015


             உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு ! 

நேற்று கூடிய செயலக கூட்டத்தின் முடிவின்படி இன்று  PGM அவர்களுடன் பேச்சுவார்ர்த்தை நடைபெற்றது. DGM(A), AGM(A) ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றனர்.  காலை 11.00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1 மணிவரை நீடித்தது. 
  
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் L.S, A.ராபர்ட்ஸ், 
A.செம்மல் அமுதம், S.கோட்டியப்பன், L.தனலட்சுமி, W.சாந்தி பிரேமகுமாரி , அந்தோனி மரிய ப்ரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  .

நாம் வைத்த அனைத்து கோரிக்கைகளின் நியாயத்தை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்னைகளையும் விரைவில் தீர்க்க 
ஒப்புக் கொண்டது.

           அங்கேயே கூடிய செயலகக்  கூட்டம் நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவெடுத்தது.

                       நமது அறைகூவலை ஏற்று வந்த அனைத்து கிளைச் செயலர்களுக்கும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக நின்ற பொறுப்பு மாநிலச் செயலர் தோழர் சென்னகேசவன் அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றி !  
   
     


Monday, November 2, 2015

        
                                  இன்றைய செயலகக் கூட்ட முடிவு !

                        போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை !





    



நமது போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் அழைத்துள்ளது.


   நாளை காலை 10 மணிக்கு கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க 
நிர்வாகிகள் கோவை -43ல் உள்ள பொது மேலாளர் அலுவலகத்திற்கு 
தவறாது வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Saturday, October 31, 2015

                   
                    முக்கியமான செயலகக் கூட்டம் !

  3-11-2015 முதல் துவங்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தை 
சிறப்புடன்  நடத்த  திட்டமிட  கோவையில்  உள்ள   அனைத்து 
கிளைச் செயலர்கள்,  மாவட்ட  சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் 
செயலகக் கூட்டம் 2-11-15  திங்கட்கிழமை     மாலை 4 மணிக்கு 
நமது சங்க அலுவலகத்தில்  மாவட்டத் தலைவர் தோழர்  A.R. 
தலைமையில் நடைபெறும்.
       
முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணனும் 
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார்.

                        அனைவரும் தவறாது பங்கேற்கவும்.

                                                  L.சுப்பராயன் 
                                          மாவட்டச் செயலர்

Thursday, October 29, 2015

மத்திய சங்க கடிதங்கள் 

நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.



  • இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உய்ரந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
    • DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
==========================================================

TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் 
TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும்  CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 
======================================================

ஓய்வூதியம் பெறும் தோழர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் தாங்கள் உயிரோடு இருப்பதாக உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தோழர்கள் 
வேறு இடங்களில் வசித்து வந்தால் அந்தந்த இடங்களில் உள்ள வங்கிக்கிளைகளில் தங்களது LIFE CERTIFICATEஐ வழங்கி 
ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
=======================================================

LEASED LINE மற்றும் CIRCUIT பழுதுகளை உடனுக்குடன் நீக்குமாறும் இதனால் ஏற்படும்  வருமான இழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

=======================================================

   JTO இலாக்காத்தேர்வு மற்றும் நேரடித்தேர்வுகள்  OUTSIDERS விரைவில் நடத்தப்படும்.  தேர்வுகள் 
நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
=======================================================

BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


===========================================================

நாலுகட்டப் பதவி  உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக இலாக்காத் தேர்வு மூலம் அடைந்த பதவி உயர்வை நாலுகட்டப்பதவி உயர்வில் ஒன்றாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் புரிந்ததே....

===========================================================

Wednesday, October 28, 2015

நமது மாவட்ட சங்கத்தின்  உண்ணாவிரத போராட்டத்தின் 
 முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று :

 
Issue of Employment Card, EPF contribution Card and 
ESI card to Contract Labours : 


உத்திரவு உள்ளது. ஆனால் அமலாக்கப்படவில்லை.
                        Click here  (for the Latest  BSNL Orders ) 

                                          
கடலூர் மாவட்டத்தில்  பணியாற்றும் ஒப்பந்த  ஊழியர்க்கு போனஸ் வழங்கப்பட்டுவிட்டது. 

              நமது மாவட்டத்திலும் வழங்க நிர்பந்திப்போம் ! 

1987ல் கோவை  SSAவின்  முதல் மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்களை
வரவேற்கும் 
அன்றைய கோட்டச் செயலர் தோழர்  L S. 

நமது தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் காட்டிய 
அறவழியில் அடிமட்ட ஊழியர்களின் வாழ்வு ஏற்றம் பெற 
அயராது உழைப்போம் ! அநீதி களைவோம் !!
                       
                    போராடாமல் இல்லை புது வாழ்வு !  

Monday, October 26, 2015

                             
      நியாயத்தை  நிலை நாட்ட,  
   போராட்டப்  பாதையில் நாம்  !

மாவட்டத் தலைவர் தோழர்  A.ராபர்ட்ஸ்,
மாவட்டச்  செயலர்   தோழர்  L.சுப்பராயன், 
துணைத்    தலைவர்  தோழர்  S.கோட்டியப்பன்
ஆகியோர் இன்று  துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்)  திரு P.ரத்தினசாமி அவர்களை 
சந்தித்து போராட்ட அறிவிக்கையை அளித்தனர்.

*   தீர்க்கப்படாத கோரிக்கைகளை     
     நிறைவேற்றக் கோரியும் , 

*  நிர்வாகம் மாற்றல் பிரச்னையில்
    பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் , 

*  ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக
     வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்  

              என்று வலியுறுத்தியும் 
                       3-11-2015 முதல் 
மாவட்டத் தலைவர் தோழர் A. ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர்  L. சுப்பராயன் 

ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்வர் 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  நியாயம் வெல்ல, அமைப்பை காத்திட,    
             அனைவரும் ஒத்துழைப்பீர் !! 


   

Monday, October 19, 2015


             Forum  சார்பான தர்ணா போராட்டம் தோழர்கள் செம்மல் அமுதம், கோட்டியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் 
தோழர் சி.ராஜேந்திரன், சம்மேளனச் செயல்ர்  தோழர் எஸ்.எஸ்.ஜி,
ராபர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் உரையாற்றினர், 

   பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி. 


Sunday, October 18, 2015

            
   என்.ராமகிருஷ்ணன் மா.செ பொறுப்பில்

                               இருந்தபோது


                              


என். ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலர் பொறுப்பில் 
இருந்தபோது  2006 ல் அவர் எழுதிய மாவட்ட மாநாட்டு 
செயல்பாட்டு அறிக்கையிலிருந்து.......



                    இன்று அவர் பொறுப்பில் இல்லாதபோது
                                           



                     
 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு !
      
        புரிந்து கொண்டால் நன்மையுண்டு !!

கடந்த 4 மாதங்களாக மாவட்டச் செயலராகிய என்னைப்பற்றி 
அவதூறுப் பிரசாரம் செய்பவருக்கு  சமர்ப்பணம் !

 " நான் எனது சொந்த வேலையில் பிஸியாக உள்ளேன், எனது
கையொப்பத்தை நீயே போட்டு சென்னை துணை லேபர் கமிஷனர்
அலுவலகத்திற்கு  புகார் கடிதத்தை அனுப்பி விடு " என்று அன்றைய 
மாவட்டச் செயலர் என். ராமகிருஷ்ணன் என்னிடம் கேட்டுக் கொண்ட
-தன் அடிப்படையில் நான் செய்தது தோழமை  நம்பிக்கையின் 
வெளிப்பாடு. 

 7 வருடம் கழித்து அதை forgery என்றும் களவாணிித்தனம் என்றும்
இப்போது எழுதுவது நம்பிக்கை துரோகம்.

   மதுரை மாநில மாநாட்டிற்கு பிறகு , கோவையில் சங்க ஒற்றுமை 
கருதி அப்போதைய மாவட்ட துணைச் செயலரான தோழர் ராபர்ட்ஸ்
அவர்களையும் நிர்வாகத்தை சந்திக்க போகும்போது  அழைத்துச்
செல்லவேண்டும் என்று நான்  அறிவுறுத்தியபோது,



 " அவன் ப்ரூட்டஸ், எனது எதிரியை சந்தித்து விஜிலென்ஸ் மூலம்
என்னை மாட்டி விட்டவன் " என்று கூறி மறுத்து விட்டு, நிர்வாகம்
அவரை தனியாக சந்திப்பதையும்  அனுமதிக்க மாட்டேன் என்று
மிரட்டிய அதே ராமகிருஷ்ணன்,  இன்று நாம் அழைத்தும் நம்மோடு
வராமல் தனியாக சென்று நிர்வாகத்தை சந்திப்பது இரட்டை வேடம்
அன்றோ !



அகில இந்திய தலைமையே சொன்னாலும் BSNLEU சங்கத்துடன் 

சேர்ந்து  தர்ணா, ஆர்பாட்டம் ஆகியவற்றை நடத்த மாட்டேன் என்று 
தீண்டாமைக் கொள்கையை கடைபிடித்தவர்,  தற்போது, முன்னாள் 
மாவட்டச் செயலர் ஆனவுடன் BSNLEUவுடன் கைகோர்த்துக்கொண்டு, 
அந்த சங்கத்தின் மாவட்டச்  செயலர் எழுதிய கடிதத்தில் கண்ணை 
மூடிக் கொண்டு நமது மாவட்டச் செயலர் கையெழுத்து இட வேண்டும் 
என்று அவர் முன்னிலையில் நிர்பந்திப்பது சரணாகதியின் உச்ச கட்டம்.



 கோவை வெளிப்புற கிளை மாநாடு நடத்த வலியுறுத்திவிட்டு, தனக்கு

அந்த கிளையில் ஆதரவு இல்லை என்று வெட்ட வெளிச்சமானவுடன்  

 மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்காமல், ஒரு மாதம் கழித்து 
அக்கிளையின் 33 உறுப்பினர்களில் நான்கே நான்கு  உறுப்பினர்களின்
பங்கேற்போடு மைனாரிட்டி மாநாடு நடத்தி அதற்கென நோட்டீஸ்
போர்டு வைத்து மாவ்ட்ட சங்கத்தைப் பற்றி அவதூறான செய்திகளை
வெளியிடுவது  அராஜகமான அடாவடிச் செயல்.






வழக்கம்போல, 2016 ஏப்ரலில் T.Mech ஊழியர்க்கு சுழல் மாற்றல்
வரும்போது  தனக்கு கவுன்சிலிங் அடிப்படையில் திருப்பூர், அவினாசி,
சோமனூர் போன்ற இடங்களுக்கு போக வேண்டி  இருக்கும் என்று
தெரிந்து கொண்டு, அதற்கு முன்பாக, தான் மட்டும் வீட்டுக்கு் அருகில்
மேட்டுபாளையத்திற்கு மாற்றல் பெற்று தப்பித்தது புத்திசாலித்தனமான
சுயநலமன்றோ !

தன்னை சமாதானம் செய்ய முயற்சிக்கும்  அனைவரிடமும்
 " என்னை  மீண்டும் மாவட்டச் செயலர் ஆக்கினால்தான் 
ஒத்துழைப்பேன், இல்லையென்றால் போட்டிச் செயல்பாடு தொடரும் "


என்று 
முன் நிபந்தனை போடுவது எந்தவிதமான ஜ
னநாயகம் என்று
நமக்கு தெரியவில்லை !

இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல் இருப்பது, நம்மை
எல்லாம் அடையாளம் காட்டிய நமது உயிமூச்சான சங்க 
வளர்ச்சிக்கு 
நல்லது  என்பதே ந
மது தோழமை வேண்டுகோள் !