Tuesday, April 25, 2017

நமக்கு நாமே நல நிதித்திட்டம்

BSNL தலைமையகம் தனது 19/04/2017 தேதியிட்டக் கடிதத்தில்...
பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக BENEVOLENT FUND 
நலநிதி ஒன்றைத் துவக்க இருப்பதாகவும்...
அந்த நலநிதி முழுக்க முழுக்க ஊழியர்களின்
பங்களிப்பில் உருவாக்கப்படும் என்றும்...
இது சம்பந்தமாக அதிகாரிகளைக்கொண்ட
குழு ஒன்று பரிசீலிக்கும் என்றும்...
நலநிதியை எவ்வாறு கையாள்வது....
மாதந்தோறும் ஊழியர்களிடம் 
எவ்வளவு தொகை பிடித்தம் செய்வது… 
நலநிதியாக எவ்வளவு தொகை வழங்குவது...
என்ற தங்களது கருத்துக்களை தொழிற்சங்கங்கள்
01/05/2017க்குள் அதிகாரிகள் குழுத்தலைவருக்கு
தெரியப்படுத்த வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் கூறியுள்ளது.

முதலில் இப்படியொரு குழு அமைக்கப்பட்டதே யாருக்கும் தெரியாது..
இது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர் தரப்பு அடங்கிய இருதரப்புக்குழு அமைப்பதுதான் சரியான முறையாகும்…
ஊழியர் தரப்பின் கருத்துக்களை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது சரியான ஜனநாயக நடைமுறையாகப் படவில்லை...

இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி கொடுப்பதைக் கைவிட்டு விட்டு ஏதேனும் நலநிதியைக் கொடுத்து அவர்களைச் சரிசெய்து விடலாம் என்று நிர்வாகம் நினப்பதாக ஊழியர்களுக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது....
இதனைப் போக்குவது நிர்வாகத்தின் கடமை…

நலநிதி சம்பந்தமாக நமது  கருத்துக்கள் இவைதான்…

நலநிதி கருணை அடிப்படைப்பணிக்கு மாற்றாக இருக்க முடியாது….
தற்போது ஏறத்தாழ இரண்டு லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
மாதம் ரூ.100/- பங்களிப்பு செய்தால்
மாதம் இரண்டு கோடி ரூபாயும்…
ஆண்டிற்கு 24 கோடி ரூபாயும் நலநிதியாகத் திரட்ட முடியும்.
தற்போது பணிக்கொடை அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியருக்கு
இருபது லட்சம் நலநிதியாக வழங்க வேண்டும்…

கருணை அடிப்படையில் பணி பெற்றவர்களுக்கு
குறிப்பிட்ட நலநிதித்தொகையும்...
கருணை அடிப்படையில் பணி கிடைக்காதவர்களுக்கு 
கூடுதல் தொகையும் வழங்கப்பட வேண்டும்..
இறந்து போன ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய
வங்கிக்கடன், கூட்டுறவு சங்கக்கடன் மற்றும் இதரக்கடன்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும்…

தற்போது ஆயுள் காப்பீடாக LICயில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.105/- பிடித்தம் செய்யப்பட்டு இறந்தால் ஒருலட்சம் வழங்கப்படுகிறது. 
இது மிகக்குறைவான தொகையாகும்.
எனவே ஆயுள் காப்பீட்டு அளவுத்தொகை 
5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.

ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி குழு அமைத்து...
உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால்...
நமக்கு நாமே நலநிதித்திட்டம் இறந்து போகும் ஊழியர் குடும்பங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். 

சாக்காடு கண்ட ஊழியரின் வாரிசுகளுக்கு...
உண்மையான நோக்கோடு.... உதவி புரியும் நோக்கோடு...
இந்தத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்...

 போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் மறியல். 
                            ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம். 

Image may contain: 10 people, crowd, tree and outdoor

Image may contain: 9 people, crowd and outdoor

Image may contain: 6 people, people standing, crowd and outdoor

Monday, April 24, 2017

Image may contain: one or more people, people sitting and outdoor

உணவளிப்பவன்… வயிறு காய்வதோ?
உயிர் கொடுப்பவன்… பிணமாவதோ?
உழுதவன்… உலகம் தொழுதவன்
வீழ்வதோ… வீழ்ந்து மடிவதோ?
தமிழகத்தில் எல்லாமே தாமதம்தான்…
இன்று தமிழகத்தில் நடைபெறும்…
போராட்டத்திற்கு
நமது ஆதரவும் வாழ்த்துக்களும்…
                         மத்திய சங்க செய்திகள்

போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு அறிவிப்பில் உள்ள 
குளறுபடிகளை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு 
சுட்டிக்காட்டி.. உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்
கொண்டுள்ளது,
---------------------------------------------------------------------------------
விரைவில் நடைபெறவுள்ள விளையாட்டுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக நமது மத்திய சங்கம் பல்வேறு 
கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விளையாட்டு 
வீரர்களுக்கு இரயிலில் AC II வகுப்பில் பயணம் செய்வது… 
தினப்படியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை 
நமது சங்கம் விவாதப்பொருளாக அளித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
SR.ACCOUNTANT கேடர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்த 
வேண்டும் என்ற CAT தீர்ப்பினை எதிர்த்து BSNL நிர்வாகம் 
மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவ்வாறு 
மேல்முறையீடு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி 
என்றும் அவர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்துவதுதான் 
சரியானது என்றும் நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை 
விடுத்துள்ளது.
Sho
அதிகாரிகள் கூட்டமைப்பு போராட்டம் !
                      
             Image result for solidarity
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு 
இன்று 25/04/2017 முதல் 
நாடு தழுவிய போராட்டத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளது.
25/04/2017 முதல்
3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்…
28/04/2017 அன்று ஒட்டுமொத்த விடுப்பு…
மே 1 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம்
 மற்றும் விதிப்படி வேலை
என்ற போராட்டத் திட்டத்தை
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அடிப்படைக்கேடர்களான
JTO/JAO சம்பள விகித மாற்றம்
முக்கிய கோரிக்கையாகும்.
 நமது வாழ்த்துக்களையும்…
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம்.

Saturday, April 22, 2017

கருணைத் தொகை

பணியில் இருக்கும்போது உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகை வழங்க்குவதற்காக "Benevolent Fund" என்ற ஒரு திட்டத்தை உருவாக்க பி எஸ் என் எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊழியர்கள் மாதம் தோறும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இது சம்பள்த்தில் பிடிக்கப்படும். இந்த நிதியிலிருந்து உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்மப்த்துக்கு கருணைத்தொகை வழங்கப்படும்.

மாதம் எவ்வளவு தொகை பிடிக்கலாம், கருணைத்தொகை எவ்வளவு வழங்கலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு நிர்வாகம் கேட்டுள்ளது.


இத்திட்டம் கருணை அடிப்படயில் பணி  வழங்குதலில்  மேலும்  சிக்கலைஉருவாக்குமா? 
  பஞ்சாபில்  அடுத்த அகில இந்திய மாநாடு !
     பஞ்சாப் மாநில செயற்குழு முடிவு !
          வரவேற்புக்குழு அமைப்பு !!



5th ALL INDIA CONFERENCE IN PUNJAB CIRCLE:- 

Circle Executive Committee meeting held on 21st April, 2017 under 
the President ship of Com. Amit Mittal and decided to hold 5th 
All India Conference in Punjab circle. All the District Secretaries 
and circle office bearers    very happily endorsed the decision of 
circle executive meeting. 

General Secretary, Com. K.S. Kulkarni Secretary CHQ, 
Com. Mahabir Singh circle Secretary Jharkhand were present 
in the meeting and addressed. 

Com. M.L. Sharma circle Patron in his speech advised the 
participants of CEC to start preparation to make the A.I.C. 
a historic one. 

The venue and date of AIC will be intimated later, after 
formation of reception committee. 

The meeting was ended with a vote of thanks by Com. Amit Mittal
 President of the meeting. 

Click Here to view the photo

Wednesday, April 19, 2017

 கோவை   மாவட்டலோகல் கவுன்சிலுக்கான 
         நமது  சங்க பிரதிநிதிகள் நியமனம்   


                        No automatic alt text available.

Tuesday, April 18, 2017

                                   மாற்றல் திட்டம் மறுபரிசீலனை !

மாற்றல் திட்டத்தை   மறுபரிசீலனை  செய்வதற்கான ஆலோசனை 
துவங்கி உள்ளது.

18-4-17 அன்று நிர்வாகம் நமது மாவட்ட சங்கத்துடன் ஆலோசனை 
நடத்தியது.

மாவட்டச் சங்க   செயலர், தலைவர், பொருளர் ஆகியோர் கலந்து 
கொண்டனர்.

கீழ்க்கண்ட கருத்துக்கள் நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டன.

1. வால்பாறை டென்யூர் ஓராண்டாக குறைக்கப்படவேண்டும்.

2. நமது   SSAவுக்கு ரூல் 8 மாற்றலில் வரும்  50 வயதுக்கு குறைவான
ஊழியர்கள் வால்பாறைக்கு   போஸ்டிங்க் செய்யப்படவேண்டும்.
 கருணை அடிப்படையிலான விலக்குக்கு ஏற்கனவே உள்ள காரணங்கள் மட்டுமே பொருந்தும்.

3. பணி ஓய்வு காரணமாக ஒரு ஊழியர் கூட இல்லாத தொலைபேசி நிலையங்கள், குறைந்தபட்ச ஊழியர்கள் கூட இல்லாத தொலைபேசி நிலையங்கள் ஆகியவற்றை பராமரிப்பது குறித்து அதிகாரிகள், ஊழியர் 
தரப்பு  கமிட்டி அமைத்து கலந்து பேசி மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும்.

4. சென்ற ஆண்டு மாற்றலில் சென்ற . டெலிகாம் டெக்னீஷியன்
 ஊழியர்களுக்கு  2018 ஏப்ரல் மாதத்தில் விருப்ப மற்றல் தரப்பட
வேண்டும். அந்த சமயத்தில் விருப்ப மாற்றல் Waiting List clear செய்யப்படவேண்டும்.

5. 2016 செப்டம்பரில்    Sr.TOA  ஊழியர்க்கு சுழல் மாற்றல் உத்திரவு
 இடப்பட்டது.  ஆகவே,  தற்போது  சுழல்  மாற்றல் தேவை இல்லை./

6..2008 முதல்    Sr.TOA, TTA,  ஊழியர்க்கு, Building to Building  சுழல் மாற்றல்
    உத்திரவுகளும்,  வெளியூர் மாற்றல் கேட்ட T.Mech  Waiting List பல ஆண்டுகளாக clear ஆகாமல் இருந்த காரணத்தால்    TT  ஊழியர்க்கு  
2010 முதல் சுழல் மாற்றல் உத்திரவுகள் அமலாக்கப்பட்டன. தற்போது 
அந்த நிலை அடியோடு மாறியுள்ளது. ஆகவே,  Sr.TOA, TTA,  ஊழியர்க்கு, 
Building to Building  சுழல் மாற்றல் தேவையற்றதாகிவிட்டது..டெலிகாம் டெக்னீஷியன் கட்டாய மாற்றல் தேவைதானா  என்பதும் அடுத்த 
ஆண்டு Point 3 அடிப்படையிலான முடிவின்படி பரிசீலிக்கப்பட வேண்டும்.    

Friday, April 14, 2017

மாற்றல் திட்டத்தை   மறுபரிசீலனை செய்ய வேண்டும் !
   -- கருத்தரங்கில் மாவட்டச் செயலர்  L.S. உரை !

Image may contain: 6 people, people sitting and table


13-4-17 அன்று  புதிய  PGMஆக பொறுப்பேற்றுள்ள திரு சுந்தர் 
உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கத்தில்
அறிமுக உரை ஆற்றிய மாவட்டச் செயலர் எல்.சுப்பராயன்,
தற்போதைய சூழலில் சுழல் மாற்றல் கொள்கையை கோவை
மாவட்டத்தில் அமலாக்கும் திட்டத்தில்   மறுபரிசீலனை தேவை
என்பதை  விளக்கமாக எடுத்து உரைத்தார்.

1. வால்பாறைக்கு டென்யூர் மாற்றலில் செல்பவர்களின் கஷ்டம்
சொல்லி மாளாது. ஆகவே, அதிகாரிகளுக்கு hard tenure போல
ஊழியர்க்கும் டென்யூர் காலத்தை ஓராண்டாக குறைக்க
வேண்டும்.

2. டெலிகாம் டெக்னீஷியன் ஊழியர்க்கு 2010லிருந்து சுழல் மாற்றல்
அமலாக்கப்படுகிறது. மாற்றலில் வெளியூர் சென்ற ஊழியர்கள்,
 இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் விருப்ப மாற்றல் பெற்றனர்.
சென்ற ஆண்டு புதிய உத்திரவின்படி சுழல் மாற்றல் அமலாக்கப்
பட்டது . கார்ப்பரேட் அலுவலக உத்திரவில்  மூன்றாண்டு என்று 
கால நிர்ணயம் உள்ளது. நமது மாவட்டத்தில் இரண்டு ஆண்டு 
என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்று. ஆகவே இரண்டு 
ஆண்டு என்பதே தொடர வேண்டும்.  மேலும்  பெரும்பாலான 
ஊழியர்கள் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கி உள்ளனர். 
ஆகவே, சுழல் மாற்றல் பற்றி  பரிசீலனை தேவை. மாற்று 
திட்டத்தை உருவாக்க வேண்டும்.

3. Sr.TOA / TTA  ஊழியர்க்கு 2008லிருந்து  சுழல் மாற்றல்கள் 
அமலாக்கப்படுகின்றன. பற்றாக்குறையை  சமன்படுத்த
வேண்டும் என்ற அடிப்படையில் நகரத்திற்குள்ளேயே 
பில்டிங்க்  to பில்டிங்க் மாற்றல் அமலாக்கப்பட்டன.  
9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  அந்த சூழ்நிலை 
அடியோடு மாறிவிட்டது. மாதாமாதம் 10க்கும் மேற்பட்ட 
Sr.TOA  ஊழியர்களின் பணி ஓய்வின் காரணமாக ஒவ்வொரு 
செக்ஷனிலும் ஒரிருவர் பணியாற்றும் சூழ்நிலை. 
பற்றாக்குறை எல்லா பகுதிகளிலும் சமமாகிவிட்டது 
மட்டுமல்ல.... acute ஆகிவிட்டது என்பதே யதார்த்தம். 
 90 சத ஊழியர்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் பணி ஓய்வு 
பெறும் நிலை ஏற்ப்பட்டு உள்ளது. ஆகவே Building to Building 
மாற்றல் தேவையற்றதாகிவிட்டது.

    மொத்தத்தில் மாற்றல் திட்டத்தில்   ஒரு முழுமையான
மறு பரிசீலனை தேவை என்று மாவட்டச் சங்கம் 
வலியுறுத்துகிறது.

4. பெரியநாயக்கன்பாளையம் CSC அமைந்துள்ள கட்டிடத்தின் 
 கடும் வெப்பம் காரணமாக அதில்  பணியாற்றும் ஊழியர்கள்
கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக  CSC  இடம்
மாற்றப்படவேண்டும்.

Thursday, April 13, 2017

 




















விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும்,
 இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும்  விளங்கியவர் அம்பேத்கர். 

இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், 
மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், 
சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும்,  வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். 

தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட 
மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். 


தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான பாரத்ரத்னா டாக்டர் அம்பேத்கர் 
அவர்களின் 127வது பிறந்தநாள்  இன்று.

அவர் காட்டிய வழியில் செயலாற்ற உறுதி ஏற்போம் !


     


                              
No automatic alt text available.
இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சம்மேளனச் செயலர்

தோழர் S.S. கோபாலகிருஷ்ணன் பங்கேற்று பணி ஓய்வு பெற்ற

தோழர்களைப் பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.


Image may contain: 3 people, people standing
Image may contain: 3 people, people standing and indoor
                            Image may contain: 3 people, people standing and indoor


                          Image may contain: 2 people, people standing

Image may contain: 3 people, people standing
           Image may contain: 2 people, people standing
Image may contain: 3 people, people standing and people sitting


 மெகா மேளாவில் பங்கேற்று அயராது பணியாற்றிய ஊழியர்களை 
 PGM, DGM, AGM  ஆகியோர்  பாராட்டி கௌரவித்தனர். 



Image may contain: 3 people, people standing and people sitting

Image may contain: 3 people, people sitting

Image may contain: 3 people, people sitting, people standing and indoor
Image may contain: 1 person, sitting, standing and indoor
Image may contain: 1 person, sitting and standing

Image may contain: 2 people, people sitting, child and indoor


Image may contain: 2 people, people standing and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people standing

Image may contain: 3 people, people standing, people sitting and indoor


Image may contain: 2 people, people sitting, people standing and indoor
Image may contain: 2 people, people sitting, people standing and indoor


Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 3 people, people sitting





                                   பயன்முகு கருத்தரங்கம்

இன்று மாவட்டச் சங்கம் நடத்திய சிறப்புக் கருத்தரங்கத்தில்
 PGM  V. சுந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

DGM ( Admn)   திரு.A.வெங்கிடுசாமி,  DGM  (Urban) திரு. S.ஆறுமுகம்,
DGM (EB & Mktg)  P. மணியன்,   AGM (PLG &Genl)   திரு.S. ரவி,
 AGM (Admn)  திரு. S.முத்துகுமார் ஆகியோர் பங்கேற்று 
சிறப்பித்தனர்.

BSNLPWA மாவட்டச் செயலர்  தோழர் B. அருணாசலம் பங்கேற்றார்.

தோழர்களும் தோழியரும் திரளாக பங்கேற்றனர்.

பங்கேற்று சிறப்பித்த  அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றி. 


Image may contain: 6 people, people sitting, table and indoor

Image may contain: 4 people, people sitting, table and indoor

Image may contain: 8 people, people sitting and table
Image may contain: 3 people, people sitting and table

Image may contain: 4 people, people sitting, people eating, table and indoor

Image may contain: 1 person, sitting and table

Image may contain: one or more people, people sitting and table


Image may contain: 3 people, people sitting


Image may contain: 10 people, people sitting and indoor

Image may contain: 12 people, people sitting and indoor
Image may contain: 14 people, people sitting and table

Image may contain: 15 people, people sitting and crowd