Monday, August 29, 2016

 
                               தோழர் நம்பீசன் காலமானார்

                              

தமிழ் மாநில சங்கத்தின் மூத்த தோழர், முன்னாள் லைன் ஸ்டாப் சங்க   மாநிலச்
செயலர் தோழர் நம்பீசன்  அவர்கள் 94 வது
வயதில் காலமானார்.

அவருக்கு நமது செங்கொடி தாழ்த்தி 
அஞ்சலி.   

Friday, August 26, 2016


       சிறக்க நடந்த   ஈரோடு மாவட்ட மாநாடு  

மாநிலச்செயலர் தோழர் நடராஜன் எழுச்சிமிகு துவக்கவுரை 
ஆற்றினார். 

ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கிட உதவும் உள்ளங்கள் 
உதவிக்கரம் நீட்டின . 

தோழர் குமார் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர் மாலி அவர்கள் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.  

 இந்நாள், முன்னாள் பொருளாளர்கள், தோழர்கள் சுப்பராயன், அசோக்ராஜன்  உள்ளிட்டோர்  மனதார  பாராட்டுரை  வழங்கினர்.     

சேவை   கருத்தரங்கத்தில் பொது மேலாளர் உரையாற்றினார். 

சம்மேளனச்செயலர் தோழர் ஜெயராமன் நிறைவுரையாற்றினார். 

மீண்டும் மாவட்டச் செயலராக தோழர்  பழனிவேல் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கபட்டார்.   

புதிய நிர்வாகிகளுக்கு நமது  வாழ்த்துக்கள்







 











Thursday, August 25, 2016

                                 
                                   

        போனஸ் கமிட்டி கூட்டம் !


  • 24-8-16 அன்று போனஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
  • புதிய PLI திட்டத்தில்... DOT-BSNL MOU உடன்பாட்டின் அடிப்படையில், வருவாய் இலக்குக்கு (Revenue Target)             மேல், கூடுதல் வருவாய் ஒவ்வொரு கோடி ரூபாய்க்கு   போனஸ் (PLI) ஒரு ரூபாய்   வழங்க   நிர்வாகம்  முன்                  வந்தது  
  • சங்க பிரதிநிதிகள் இதை ஏற்காமல்   2014-15, 2015-16 ஆண்டுகளுக்கு அட்ஹாக்  போனஸ் வழங்க             வலியுறுத்தினர் .

2014-15 ஆண்டுக்கு ரூ.1100/- வழங்க நிர்வாகம் முன்வந்தது.
இந்த தொகையையும் சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை.  
அதிகப்படுத்த வலியுறுத்தினர்.

2015-16 நிதியாண்டுக்கு  நிதிநிலை அறிக்கை தணிக்கை         
செய்த பிறகு விவாதிப்பதாக தெரிவித்தது.

அடுத்த கூட்டம்   5-9-16 அன்று நடைபெறும் என்று முடிவு  
எடுக்கப்பட்டது.  





அம்பலமான  அபிமன்யூவின் பொய்ப்பிரச்சாரம் !

பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்ட  BSNLEU   சங்க 
பொதுச் செயலர்,  சென்ற தேர்தலுக்கு முன் நமது சங்கம் மூன்று
இலக்க   போனஸுக்கு ஒப்புக் கொண்டது என்ற பொய்பிரச்சாரம்
என்பது இந்த கூட்டத்தில் அம்பலமானது.   

ஈரோடு மாவட்ட மாநாடு 




ஆகஸ்ட் - 25 மற்றும் 26 தேதிகளில்...

பகுத்தறிவின் பிறப்பிடம்..  

ஈரோட்டில் நடைபெறும்

NFTE

ஈரோடு  மாவட்ட மாநாடு 

வெற்றி பெறவும்..

அன்புத்தோழர்.குமார் 

அவர்களின் பணி நிறைவு விழா 

சிறக்கவும்  வாழ்த்துகிறோம்...

Tuesday, August 23, 2016

செப்டம்பர் 2  போராட்ட தயாரிப்பு கூட்டம் 






Monday, August 22, 2016


ஆடு நனைகிறதே  என்று............. 



20  ஆண்டுகளாக  எதிரியாக நினைத்து  ஒழிக்க நினைத்தவரை , திடீரென்று மனமாறி  
காப்பாற்றியதாம்   இரட்டை நாக்கு !!

ஆஹா ! தோழர்கள் மீது   என்னே திடீர் கரிசனம் !!

உடுமலையில் மாவட்டச் செயலர் நல்லவர் ; கிளைச் செயலர்தான் மோசமானவர் என்று சொல்வார்கள் !

கோவையிலோ   வேறு மாதிரி பேசுவார்கள் !
இந்த இரட்டை நாக்கு பேர்வழிகள் !!