Thursday, May 7, 2015

  எழுச்சியுடன் துவங்கி இனிதே 
முடிந்த கோவை மாவட்ட மாநாடு 

    7-5-15 காலையில்    தோழர் A.காமராஜ் 
தேசியக் கொடியையும் 

தோழர் D.R. மருதாசலம் சம்மேளனக் கொடியையும் ஏற்றிட,

மாவட்ட தலைவர் தோழர் ஸ்ரீதரன்  தலைமையில் துவங்கிது   மாவட்ட மாநாடு.

தோழர் கோட்டியப்பன் உணர்ச்சிமிகு 
தியாகிகள் அஞ்சலி உரையை நிகழ்த்திட,


மாவட்டச் செயலர்  தோழர் என்.ராமகிருஷ்ணன் வரவேற்புரையை நல்கிட,  

விளக்கமான துவக்கவுரையை மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன்  ஆற்றிட, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் 
தோழர் கே.எம், செல்வராஜ் அவர்கள் அரசியல் விளக்க உரை  ஆற்றிட,

 DGM (Admn) திரு. ரத்தினசாமி அவர்கள்  நமது நிறுவன  நிலையை பற்றி விளக்கவுரை ஆற்றிட, 

நமது அன்பிற்கினிய மூத்த தோழர் ஆர்.கே, சம்மேளனச் செயலர்கள்  கோ. ஜெயராமன்,  S.S.கோபாலகிருஷ்ணன், அகில இந்திய  சங்க அழைப்பாளர் தோழர் P.காமராஜ், 
மாநிலப் பொருளர் தோழர் K.அசோக்ராஜ், 
ஈரோடு மாவட்டத் தலைவர்  தோழர் G.குமார் ஆகியோர் சிறப்புரை ற்றிட,மாநாடு சிறப்பாக நடந்தது.

அனைத்து சங்கத் தலைவர்களும் தோழர் SSG   அவர்களின் தொழிற்சங்க சேவையை  வெகுவாக பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக,  மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணன்  முன்மொழிய மாவட்டத் தலைவர் தோழர் ஸ்ரீதரன் வழிமொழிய 

மாவட்டத் தலைவர்  தோழர் .A.ராபர்ட்ஸ்

மாவட்டச் செயலர் தோழர். எல் சுப்பராயன்


மாவட்டப் 
 பொருளர் தோழர் A.செம்மல்லமுதம் 

உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய மாவட்டச் செயலர் தோழர் L.S  நன்றி கூற,  தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த மாநாடு  ஒற்றுமையை பறைசாற்றி  இனிதே நிறைவுற்றது.  

No comments:

Post a Comment