Tuesday, November 3, 2015


             உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு ! 

நேற்று கூடிய செயலக கூட்டத்தின் முடிவின்படி இன்று  PGM அவர்களுடன் பேச்சுவார்ர்த்தை நடைபெற்றது. DGM(A), AGM(A) ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றனர்.  காலை 11.00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1 மணிவரை நீடித்தது. 
  
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் L.S, A.ராபர்ட்ஸ், 
A.செம்மல் அமுதம், S.கோட்டியப்பன், L.தனலட்சுமி, W.சாந்தி பிரேமகுமாரி , அந்தோனி மரிய ப்ரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  .

நாம் வைத்த அனைத்து கோரிக்கைகளின் நியாயத்தை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்னைகளையும் விரைவில் தீர்க்க 
ஒப்புக் கொண்டது.

           அங்கேயே கூடிய செயலகக்  கூட்டம் நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவெடுத்தது.

                       நமது அறைகூவலை ஏற்று வந்த அனைத்து கிளைச் செயலர்களுக்கும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக நின்ற பொறுப்பு மாநிலச் செயலர் தோழர் சென்னகேசவன் அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றி !  
   
     


No comments:

Post a Comment