Monday, September 19, 2016





நன்றியுரை :
அருண்குமார்-பூர்ணிமா திருமண வரவேற்பு விழாவிற்கு
வருகை தந்த அனைவருக்கும் நன்றி பாராட்ட கடமைப் பட்டுள்ளோம்.
இந்த திருமணம் இவ்வளவு சிறப்பாகவும் மாறுபட்டும்
நடப்பதற்கு 94 வயது நிரம்பிய மூத்த தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் அவர்களே காரணம்.
அவரது அளப்பரிய தொண்டால், சீரிய செயல்பாட்டால்
அவரது வாரிசுகளான மகன் சந்திரசேகர், மருமகள்
பொற்கொடி, பேரன் ராகுல்,பேத்தி கீர்த்தி ஆகியோர்
ஈர்க்கப்பட்டு, முற்போக்கு எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.
அந்த மூத்த தோழர் எல்.ஜீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல திருமண வரவேற்புகளில் பங்கேற்று இருப்பீர்கள்.
ஆனால் இது புதுமையானதாக இருந்திருக்கும், மாற்றம்
உள்ளதாக அமைந்துள்ளது.
வழக்கமான திருமணங்களில் மனமகன் வீட்டார் தாங்கள்
சற்று மேலே என்று நினைத்து செயல்படுவர். ஆனால்
இந்த திருமணத்தில் மணமகன் வீட்டார் எந்த செருக்குமின்றி
நடந்து கொண்டனர். மணமகள் வீட்டாரும் பணிந்து நிற்காமல்
நடந்துகொண்டோம்,எல்லா விஷயங்களிலும்.
இதற்கு மூல காரணம் நமது ஆசான் காரல் மார்க்ஸ்
அவர்கள்தான்.
மார்க்ஸியத்தை உள்வாங்கியவர்களின் இல்லத்
திருமணங்கள் இவ்வாறாகத்தான் அமைந்திருக்கும்.
இங்கே சாதிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ
இடமில்லை. ஆண், பெண் வேறுபாடின்றி சரிசமமாக
கருதி திருமணம் நடைபெறும்
இங்கேதான் மணமகளின் தந்தைக்கு, மணமகன் வீட்டார்
நினைவுப்பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்த
புதுமையையும் கண்டோம்.அது தோழர் சந்திரசேகர் அவர்களின்
பெரிய மனத்திற்கு உதாரணம்.
எனக்கு நிறைய அண்ணிகள் உண்டு. அனைவரும் என்னை சகோதரனாக கருதி பழகுகிறார்கள். கோவையில் 15-9-16 அன்று
திருமணம் முடிந்தவுடன் எனது அண்ணி சாரதா அவர்கள்,
" மணி, ( எனது செல்லப்பெயர் ) உனக்கு இரண்டு மணி
மணியான மாப்பிப்ளைகள் கிடைத்து உள்ளனர்,
மணி மஹாலில் நடந்த திருமணத்திற்கு பிறகு"
என்று கவித்துவமாக வாழ்த்து தெரிவித்தார்.
எனது அலுவலகத்திலும் அதே போல எனது தோழியர்கள்,
சுப்பராயன், ரிடையர்மெண்ட் ஆவதற்குள் இரண்டு
மகள்களுக்கும் திருமணம் செய்து முடித்து வீட்டீர்கள்,
இனி உங்களது குடும்ப பாரம் குறைந்தது என்று கூறி
வாழ்த்தினர்.
எனது முதல் மருமகன் ரகுராமன், அந்த திருமணம், காதல் திருமணம், கலப்புத்திருமணம், சாதி மறுப்பு திருமணம்.
இரண்டாவது மகளின் திருமணம் தோழமை
திருமணமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த திருமணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின்
அனைத்து முன்னணி தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தோழர் கே,ஆர்.சங்கரன் அவர்களின் தொழிற்சங்க
அலுவலகம் நான் பணியாற்றும் டெலிபோன் எக்சேஞ்ச்க்கு
பின் உள்ளது. பல ஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்டங்களில்
பங்கேற்று, ஆதரவு கோஷம் எழுப்பி உள்ளேன். ஆவர்
பங்கேற்று வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதேபோல தோழியர் தமிழ்ச்செல்வி அவர்களின்
பங்கேற்பும் பாராட்டுதலுக்கு உரியது.
தோழியர் பாலபாரதி அவர்களின் வருகையும் பங்கேற்பும்
மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் மார்க்சிஸ்ட் கட்சித்
தலைவர் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும்
சொந்தமானவர். மகளிர் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாராடுதலுக்குரிய தோழியர். எம்.எல்.ஏ ஆன பின்னும்
எளிமையான அவரது செயல்பாடு போற்றுதலுக்குரியது.
மேலும் இவ்விழாவிற்கு தலைமையேற்ற தோழர் லாசர்,
வரவேற்புரை நல்கிய தோழர் ஜோதிராம், மற்றும் வாழ்த்துரை
வழங்கிய தோழர்கள் சி.ராமகிருஷ்ணன் , மூட்டா ஆர்.கிருஷ்னமூர்த்தி, கே.ஏ.தேவராஜன், சி.செல்வின் சத்தியராஜ், வங்கி அதிகாரிகள் சங்கத்தலைவர் தோழர் சி.பி.சந்திரசேகர்,
எனது சங்கத்தின் தலைவர்கள், லட்சம், ரமேஷ், பூபதி, பரிமளம்
உள்ளிட்ட அனைத்து தோழர் தோழியர்க்கும் குடும்பத்தார்க்கும்
நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. .


0:00





No comments:

Post a Comment