Thursday, September 22, 2016


                                    CGM அவர்களுடன் சந்திப்பு !
 கோவை வந்துள்ள தமிழ் மாநில முதன்மைப் பொது மேலாளர்
திருமதி பூங்குழலி அவர்களை இன்று நமது மாவட்ட சங்கத்தின்
சார்பாக தோழர்கள்   சுப்பராயன்,  ராபர்ட்ஸ்,  செம்மல் அமுதம், 
நரேஷ்குமார்,   கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். 

புதிய இணைப்புகள் வழங்க டெண்டர் மூலம் காண்ட்ராக்ட் 
விடுவது தவறு ! போதிய உபகரணங்களை கொடுத்தால் 
ஊழியர்களே இனைப்புகளை வழங்குவர் என்று உறுதி 
அளித்தோம்.
                      கரையான்  புற்றெடுக்க,
  கருநாகம்  குடிகொண்டதைப் போல. 

வருங்காலத்தில் இந்த முடிவு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் 
பாதகமாக முடியுமென்று கூறி நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.

கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் அடிப்படையிலேயே, மாநில
நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 பல மாநிலங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலாகிவிட்டது.      

தமிழகத்தில் தாமதமாகவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்
படுகிறது. 

ஆகவே மேல் மட்டத்தில் இப்பிரச்னையை எடுக்குமாறு கூறினார்.

No comments:

Post a Comment