Thursday, June 15, 2017

ஊதிய மாற்றத்திற்கான  அடுத்த கட்டம் !    
2017 ஜூலை 3,4 தேதிகளில் அடையாள   உண்ணாவிரதம் ! தேசிய போரம்  முடிவு ! 

டெல்லியில் 14-6-17 அன்று  நடந்த ஆர்பாட்டத்திற்கு  பிறகு கூடிய தேசிய போரம் தலைமையின் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி ஆழமான விவாதம் நடைபெற்றது. 
14-6-17 ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு BTU(BMS) சங்கத் தலைவர் தோழர் R.C. பாண்டே தலைமை ஏற்றார்.பாரதீய அதிகாரிகள் சங்கமும் நமது தேசிய போரத்தில் இணைந்தது. ஜூலை 3 மற்றும் நான்கு ஆகிய தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும் அன்று தீர்மானங்கள்  ஊதிய மாற்றத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தீர்மானங்கள்   நிறைவேற்றி பிரதமர்,  அமைச்சர் ஆகியோருக்கு அனுப்புவது, தலமட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவது,  மற்ற மத்திய சங்கங்களின் ஆதரவை கோருவது என்றும் , தேவைப்பட்டால்    வேலைநிறுத்த போராட்டம் பற்றி பிறகு பரிசீலிப்பது என்றும்  ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.                          

                     CHQ NEWS 

15-06-2017 : National Forum Meeting:- 


                     Click Here

No comments:

Post a Comment