Sunday, October 18, 2015

            
   என்.ராமகிருஷ்ணன் மா.செ பொறுப்பில்

                               இருந்தபோது


                              


என். ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலர் பொறுப்பில் 
இருந்தபோது  2006 ல் அவர் எழுதிய மாவட்ட மாநாட்டு 
செயல்பாட்டு அறிக்கையிலிருந்து.......



                    இன்று அவர் பொறுப்பில் இல்லாதபோது
                                           



                     
 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு !
      
        புரிந்து கொண்டால் நன்மையுண்டு !!

கடந்த 4 மாதங்களாக மாவட்டச் செயலராகிய என்னைப்பற்றி 
அவதூறுப் பிரசாரம் செய்பவருக்கு  சமர்ப்பணம் !

 " நான் எனது சொந்த வேலையில் பிஸியாக உள்ளேன், எனது
கையொப்பத்தை நீயே போட்டு சென்னை துணை லேபர் கமிஷனர்
அலுவலகத்திற்கு  புகார் கடிதத்தை அனுப்பி விடு " என்று அன்றைய 
மாவட்டச் செயலர் என். ராமகிருஷ்ணன் என்னிடம் கேட்டுக் கொண்ட
-தன் அடிப்படையில் நான் செய்தது தோழமை  நம்பிக்கையின் 
வெளிப்பாடு. 

 7 வருடம் கழித்து அதை forgery என்றும் களவாணிித்தனம் என்றும்
இப்போது எழுதுவது நம்பிக்கை துரோகம்.

   மதுரை மாநில மாநாட்டிற்கு பிறகு , கோவையில் சங்க ஒற்றுமை 
கருதி அப்போதைய மாவட்ட துணைச் செயலரான தோழர் ராபர்ட்ஸ்
அவர்களையும் நிர்வாகத்தை சந்திக்க போகும்போது  அழைத்துச்
செல்லவேண்டும் என்று நான்  அறிவுறுத்தியபோது,



 " அவன் ப்ரூட்டஸ், எனது எதிரியை சந்தித்து விஜிலென்ஸ் மூலம்
என்னை மாட்டி விட்டவன் " என்று கூறி மறுத்து விட்டு, நிர்வாகம்
அவரை தனியாக சந்திப்பதையும்  அனுமதிக்க மாட்டேன் என்று
மிரட்டிய அதே ராமகிருஷ்ணன்,  இன்று நாம் அழைத்தும் நம்மோடு
வராமல் தனியாக சென்று நிர்வாகத்தை சந்திப்பது இரட்டை வேடம்
அன்றோ !



அகில இந்திய தலைமையே சொன்னாலும் BSNLEU சங்கத்துடன் 

சேர்ந்து  தர்ணா, ஆர்பாட்டம் ஆகியவற்றை நடத்த மாட்டேன் என்று 
தீண்டாமைக் கொள்கையை கடைபிடித்தவர்,  தற்போது, முன்னாள் 
மாவட்டச் செயலர் ஆனவுடன் BSNLEUவுடன் கைகோர்த்துக்கொண்டு, 
அந்த சங்கத்தின் மாவட்டச்  செயலர் எழுதிய கடிதத்தில் கண்ணை 
மூடிக் கொண்டு நமது மாவட்டச் செயலர் கையெழுத்து இட வேண்டும் 
என்று அவர் முன்னிலையில் நிர்பந்திப்பது சரணாகதியின் உச்ச கட்டம்.



 கோவை வெளிப்புற கிளை மாநாடு நடத்த வலியுறுத்திவிட்டு, தனக்கு

அந்த கிளையில் ஆதரவு இல்லை என்று வெட்ட வெளிச்சமானவுடன்  

 மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்காமல், ஒரு மாதம் கழித்து 
அக்கிளையின் 33 உறுப்பினர்களில் நான்கே நான்கு  உறுப்பினர்களின்
பங்கேற்போடு மைனாரிட்டி மாநாடு நடத்தி அதற்கென நோட்டீஸ்
போர்டு வைத்து மாவ்ட்ட சங்கத்தைப் பற்றி அவதூறான செய்திகளை
வெளியிடுவது  அராஜகமான அடாவடிச் செயல்.






வழக்கம்போல, 2016 ஏப்ரலில் T.Mech ஊழியர்க்கு சுழல் மாற்றல்
வரும்போது  தனக்கு கவுன்சிலிங் அடிப்படையில் திருப்பூர், அவினாசி,
சோமனூர் போன்ற இடங்களுக்கு போக வேண்டி  இருக்கும் என்று
தெரிந்து கொண்டு, அதற்கு முன்பாக, தான் மட்டும் வீட்டுக்கு் அருகில்
மேட்டுபாளையத்திற்கு மாற்றல் பெற்று தப்பித்தது புத்திசாலித்தனமான
சுயநலமன்றோ !

தன்னை சமாதானம் செய்ய முயற்சிக்கும்  அனைவரிடமும்
 " என்னை  மீண்டும் மாவட்டச் செயலர் ஆக்கினால்தான் 
ஒத்துழைப்பேன், இல்லையென்றால் போட்டிச் செயல்பாடு தொடரும் "


என்று 
முன் நிபந்தனை போடுவது எந்தவிதமான ஜ
னநாயகம் என்று
நமக்கு தெரியவில்லை !

இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல் இருப்பது, நம்மை
எல்லாம் அடையாளம் காட்டிய நமது உயிமூச்சான சங்க 
வளர்ச்சிக்கு 
நல்லது  என்பதே ந
மது தோழமை வேண்டுகோள் !

No comments:

Post a Comment