Saturday, January 14, 2017

                                 நெகிழ வைத்த அனுபவங்கள் !

கடந்த சில நாட்களாக  பல முன்னணித் தோழர்களிடமும் 
தோழியர்களிடமும்  நமது அமைப்பை காக்கும் கருத்துப் 
பறிமாற்றம் நடந்தது. பணி ஓய்வு  பெற்ற பல தோழர்களும் 
தோழியர்களும் சங்க அலுவலகத்திற்கே வந்து  நன்கொடை 
வழங்கி தமது சங்கப்பற்றை வெளிக்காட்டினர்.   

யார் என்ன பிரச்சாரம் செய்தாலும் அதற்கு செவிமடுக்க 
மாட்டோம் என்ற தோழர் தோழியரின் உறுதிப்பாடு நமக்கு 
மேலும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.

3 தோழியர்களும் 1 தோழரும் நமது சங்கத்திற்கு சந்தா 
பிடித்தம் செய்ய கடிதம் கொடுத்துள்ளனர். 

அதில் ஒருவர் மூத்த தோழியர்  : அவர் எனக்கு அனுப்பிய 
வாழ்த்து:

      " சத்தமின்றி யுத்தம் செய்யும் உன் மனம், நிலையான நிம்மதி

பெற வாழ்த்துக்கள். உன் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களைப்
பற்றி கவலைப்படாதே.  நீ  அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் 
இருக்கின்றாய் என்று பெருமைப் படு."    

 இன்னொருவர் இளையவர். அவரது படிவத்தை அவினாசி சென்று
 பெற்று வந்தவர் தோழர் வேலுசாமி. தற்போது JTO பயிற்சியில் இருப்பவர்.   

அந்த தோழியர் இன்னலுக்கு ஆளானபோது நாம் தலையிட்டு
அவர் பிரச்னையை தீர்த்தோம்.  

 பிரச்னை சுமுகமாக முடிந்தவுடன் அந்த ஊழியர் நமக்கு அனுப்பிய   SMS :

Sir, thank you so much for the efforts you have taken to transfer me. I will never forget
 this  help in my life. My whole family is happy.... thank you sir...



 மற்றொரு தோழியர் நமது   சங்கத்தின் முயற்சியால் 
 கருணை அடிப்படையில்  பணிக்கு வந்தவர். அவரிடம் 
கிணத்துக்கடவுக்கு சென்று சந்தா படிவத்தை 
பெற்று வந்தவர் பணி ஓய்வு பெற்ற குறிச்சி  தோழர் 
தண்டபாணி அவர்கள்.
 அனைவரையும்   பாராட்ட வார்த்தைகள் இல்லை. 

                           நன்றி ! மனமார்ந்த நன்றி !! 


   

No comments:

Post a Comment